தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், ஒலி பெருக்கி மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் 104 பேர் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் அறிவுறுத்தலின்படி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது சொந்தப் பணத்தில் இருந்து, இவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் கழகச் செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.