tamilnadu

img

கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளவர்களின் மனஇறுக்கத்தை போக்க பாடல் பாடி அசத்தும் கலைஞர்.....

தஞ்சாவூர்:
கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளவர்களின் மன இறுக்கத்தை போக்கும்வகையில், வாரம் ஒருமுறை சென்று, ஆர்கெஸ்ட்ரா இசைக்லைஞர் ஒருவர் பாடல்களை பாடி உற்சாகப்படுத்தி வருவதை பலரும் பாராட்டியுள்ளனர்.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிராங்கிளின்(46). இவர் ஜீவன் சுருதி என்ற பெயரில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அரிமா சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் இசை நிகழ்ச்சிகள் இல்லாத நாள்களில் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், கடந்த 1 ஆம் தேதி மே தினத்தில், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வழிகாட்டுதலோடு மாலைஇசை நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சி, கொரோனா சிகிச்சை பெறுவர்களுக்குஉற்சாகத்தை அளித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வாரம் ஒருமுறை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி மீண்டும் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியை நடத்தினர்.இதுகுறித்து பிராங்கிளின் கூறுகையில், கொரோனா மையத்தில் பலரும் தனிமையாக இருப்பதால், மன இறுக்கத்தில் உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் ரெட் கிராஸ் முத்துக்குமார் ஆகியோர் ஒத்துழைப்புடன் மே தினத்தில் 3 மணி நேரம் இசை நிகழ்ச்சியை நடத்தினேன். அங்கிருந்த பலரும் பாராட்டினர். மேலும், அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து வாரம் ஒருமுறை நிகழ்ச்சியை நடத்த கேட்டுக்கொண்டார். அதன் பேரில் இரண்டாவது வாரமாக நடத்தினேன். பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, உற்சாகமாக ரசித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதற்காக நான் எவ்வித கட்டணமும் பெறவில்லை. கொரோனா சிகிச்சை மையத்துக்கு செல்லவேஎல்லோரும் அச்சப்படும்  நேரத்தில், நான்தனிமனித இடைவெளியுடன் பாட்டுப் பாடிஅவர்களை மகிழ்வித்து வருகிறேன்” என்றார்.

;