tamilnadu

img

காலமானார் 

தஞ்சாவூர், ஆக.28- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் தோழர் கோவிந்தராசு(60) செவ்வாயன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றியச் செயலாளராக தோழர் கோவிந்தராசு பணியாற்றி வந்தார். அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் மதுக்கூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன், கே.லெட்சுமணன், எம்.அய்யநாதன், ஏ.எம்.வேதாச்சலம், கலாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.