tamilnadu

img

தெம்மாவூர் நிழற்குடை மீண்டும் தகர்ப்பு

சென்னை, அக். 2 - புதுக்கோட்டை மாவட் டம் தெம்மாவூரில் 2013ம் ஆண்டில் பேருந்து நிழற் குடை அமைக்கப்பட்டது.தலித் மக்கள் நிழற்குடை யில் அமர்வதை சகித்துக் கொள்ள முடியாத சாதிய வாதிகள், நிழற்குடை இருக்கைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தனர். சட்டத்திற்கு சவால்விடுகிற பகிரங்கமான இச்செயல் குறித்து அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், செப்டம்பர் 30 தோழர் பி.சீனிவாசராவ் நினைவுதினத்தன்று நேரடி நடவடிக்கை மூலம் தெம்மா வூர் தேநீர் கடையில் இரட்டைக்குவளை முறைக்கு முடிவு கட்டுவது மற்றும் நிழற்குடையில் இருக்கைகளை அமைப்பது என அறிவிக்கப்பட்டது. போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமே நிழற்குடையை சீர்ப்படுத்தினர். செப்டம்பர் 29 அன்றே தெம்மாவூர் தலித் மக்கள் நிழற்குடை யில் அமர்ந்தனர். தேநீர் கடையிலும் இரட்டைக் குவளை ஒழிந்தது.

இதனை சகிக்க முடி யாத சாதியவாதிகள், மீண்டும் நிழற்குடை இருக்கைகளை முற்றிலும் உடைத்துள்ளனர்.   இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக் கிறது. நிழற்குடையை சேதப்