தஞ்சாவூர், மே 20-தமிழ் வழிக் கல்வியில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழர் அறம் சார்பில்நடைபெற்ற விழா சனிக்கிழமை அன்று பட்டுக்கோட்டையில் தமிழர் அறம் நிறுவனத் தலைவர் சி.இராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாசிலா.சுகுமார் முன்னிலை வகித்தார். கம்பன் பேரவை ஒருங்கிணப்பாளர் எ.சு.கே.கவி வரவேற்றார்.12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.மகாலெட்சுமிக்கு ரூ.5,000 பரிசாக வெற்றிச்செல்வி(முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் பேத்தி) வழங்கினார். பேராவூரணி அரசு பெண்கள் பள்ளி மாணவி சகானாவுக்கு ரூ.4,000, தமிழறிஞர் சா.பன்னீர்செல்வம் வழங்கினார். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தம்பிக் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இரா.அட்சயாவுக்கு ரூ.4,000 மாந்தநேயன் வழங்கினார். மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நா.காவியாவுக்கு செந்தமிழ்வாணன் ரூ.3,000 வழங்கினார். தமிழ்நாட்டில் முதன் முதலில் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிக்கு ரூ5,000 பேராசிரியர் பிரபா கல்வி மணி வழங்க,செந்தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார். இதே போல் பட்டுக்கோட்டை தாய்த் தமிழ் பள்ளிக்குபேராசிரியர் பிரபா கல்வி மணி அதன் பொறுப்பாளரிடம் ரூ.5,000 வழங்கினார். தாய்த்தமிழ் கல்வி அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் பிரபா கல்வி மணியின் சேவையைபாராட்டி ரூ.5,000 உலக தமிழ்க்கழக துணை தலைவர்அறிவுறுவோன் வழங்கினார். ஆக கூடுதல் தொகைரூ.31,000 வழங்கப்பட்டது. தமிழர் அறம் தலைவர் சி.ராமசாமி பேசினார். வழக்கறிஞர் சு.செந்தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார். இரவி நன்றி கூறினார்.