தஞ்சாவூர், ஜூலை 20- தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ஒன்றிய வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர் கே.பன்னீர்செல் வம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, தீ.ஒ.மு மாவட்டத் தலை வர் கே.அபிமன்னன், துணைத் தலைவர் என்.சிவகுரு, ஒன்றியச் செயலாளர் ஏ.கருப்புசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியத் தலைவர் ஞானமாணிக்கம், ஒன்றியச் செயலாளர் கே.சௌந்தர்ராஜன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றி யச் செயலாளர் பி.சங்கிலி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரவேற்புக் குழு தலைவராக கே.பன்னீர் செல்வம், செயலாளராக ஏ.கருப்புசாமி, பொருளாளராக எஸ்.ஞானமாணிக்கம் உள்ளிட்ட 21 பேர் கொண்ட வர வேற்புக் குழு அமைக்கப்பட்டது. மேலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்குவது. தேவையான நிதி வசூலித்தல், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது, மற்றும் மாநாடு குறித்து பட்டியல் இன மக்களைச் சந்தித்து விளக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.