tamilnadu

img

விவசாயி உடல் தானம்

 தஞ்சாவூர், செப்.19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கள்ளங்காடு கிராமத்தை சேர்ந்த வர் இராஜாங்கம்(72). விவசாயியான இவர் தனது மரணத்திற்கு பிறகு உடலை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு வழங்குவதாக எழுதி கொடுத்து இருந்தார். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை இராஜாங்கம் மரணமடைந்தார். இதையடுத்து உறவினர்கள் தஞ்சை மருத்து வக் கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாலை 2 மணி வரை மருத்துவமனை வாகனம் வராததால், வீட்டில் இருந்த ராஜாங்கத்தின் உடலை உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக கொண்டு சென்ற னர். இறந்த ராஜாங்கத்திற்கு சரோஜா என்ற மனைவியும், ராஜராஜன், சிவகுருநாதன் என 2 மகன்களும், ராஜ ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.