tamilnadu

img

வேலைவாய்ப்பு பயிற்சி மைய மேம்பாட்டிற்கு நிதி வழங்கிய மாணவர்கள்

கும்பகோணம், டிச.8-  தஞ்சை மாவட்டம் கும்பகோ ணத்தில் அரசு போக்குவரத்து தொழி லாளர்கள் சங்கம் சார்பில் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சிஐடியு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் தளத்தில் டாக்டர் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சிக் கூடம் அமைக்கப் பட்டு கடந்த 15 வருடங்களாக ஏராள மான வேலைவாய்ப்பிற்கு போட்டி தேர்வில் வெற்றி பெற கல்வியாளர்கள், அதிகாரிகள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியாற்றுவோர் இல வசமாக போட்டித் தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஏராளமா னோர் போட்டி தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் 28 மையங்களில் கும்ப கோணம் மையம் இரண்டாவது இடத்தை பெற்று பாராட்டுக்களை பெற்று வரு கிறது. இந்நிலையில் பயிற்சி மையம் கட்டடப் பணிகள் நடந்து வருவதால் அதற்கு இலவசமாக போட்டித் தேர் வுக்கு பயின்று வரும்  மாணவர்கள் நிதி அளித்து வருகிறார்கள்.  தற்போது பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் கோகிலா, பிரபாவதி, ரம்யா, அபினா, துர்கா, புனிதா, சங்கரி, விஜி சிலம்பரசன், கலை யரசன், சந்தோஷ், கண்ணன், லட்சுமி, விஜி,  அனுசுயா, அருள்செல்வி சர வணன், கார்த்திக், சரண்யா,  மணி கண்டன், வாஞ்சிநாதன் ஆகியோர் பயிற்சி மைய கட்டட மேம்பாட்டு நிதி யாக ரூ 15,000 வழங்கினார்கள். மன முவந்து பயிற்சி பெறும் மாணவர்கள் கொடுத்த நிதியை அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க பொருளாளர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள்  திருநாவுக்கரசு, கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச்செயலாளர் சின்னை. பாண்டியன் பயிற்சி பெறும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார். மைய ஒருங்கிணைப்பாளர் ம.சுரேந் தர் நன்றி தெரிவித்தார்.