tamilnadu

img

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

தஞ்சாவூர், அக்.26- மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வல்லம்புதூர் கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-  கடந்த ஆண்டிலிருந்து மக்காச் சோள படைப்புழு தாக்குதல் காணப் படுகிறது. நடப்பாண்டில் ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொண்டதால், பூச்சித் தாக்கு தல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.  கோடை உழவு செய்தல், கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு இடுதல், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் பெவேரியா பேசியானா எதிர் உயிர் பூஞ்சான விதை நேர்த்தி செய்தல், வரப்பு பயிர் மற்றும் ஊடுபயிராக உளுந்து, சூரியகாந்தி மற்றும் வெண்டை சாகுபடி செய்தல், அசாடிராக்டின் 1 சதவீதம் என்ற இயற்கை மருந்தை பயன் படுத்துதல், மெட்டாரைசியம் அனி சோபிலே என்ற எதிர்உயிர் பூஞ்சானம் தெளித்தல், ஏக்கருக்கு 20 என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறி அமைத்து ஆண் மற்றும் பெண் பூச்சிகளை கவர்ந்து அழித்தல் போன்ற முறைகளை ஒருங்கி ணைந்த முறையில் செயல்படுத்தி யதன் விளைவாக நடப்பாண்டில்  படைப்புழுவின் தாக்குதல் வெகு வாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், படைப்புழுவினை முற்றிலும் அழிக்கும் விதமாக ஒட்டுமொத்தமாக பூச்சிக்கொல்லி தெளிப்பு திட்டத்தினை அரசு செயல் படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 20-25 நாள் வயதுள்ள பயிரில் அசாடிராக்டின் 1 சதவீதம் மருந்தும், 40-45 வயதுள்ள பயிருக்கு பரிந்து ரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, தஞ்சாவூர் மற்றும் பூதலூர் ஒன்றியங்களில் 40-45 வயதுள்ள சுமார் 74 ஹெக்டேர் பரப்பளவில் ரசாயன பூச்சிக் கொல்லியான ஸ்பைனிடோரம் என்ற மருந்தை ஹெக்டேருக்கு 250 மிலி என்ற அளவில் தெளிக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு ஹெக்டேருக்கு 3500 ரூபாய் மதிப்பி லான விலையில்லா மருந்தும், ரூபாய் ஆயிரம் தெளிப்பு கூலியும் வழங்கப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது” என்றார்.  நேரடி நெல் விதைப்பு முறை  பின்னர், நேரடி நெல் விதைப்பு குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குனர் தெரிவித்ததா வது:-  நடவு முறை மூலம் நெல் விதைப்பு செய்வதற்கு 1200 மிமீ தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், நேரடி நெல் விதைப்பின் மூலம் நெல் விதைப்பு செய்வதற்கு 950 மிமீ தண்ணீர் போதுமானதாகும்.  மேலும், நேரடி நெல் விதைப்பு முறையில் நாற்றாங்கால் விடுதல், நடவு நடுதல் போன்ற பணிகள் இல்லாததால், விவசாயிகளுக்கு ஏற்படும் செலவு குறைகிறது. நேரடி  நெல் விதைப்பு முறையினை ஊக்கப் படுத்திடும் வகையில், தமிழக அர சால் ஏக்கருக்கு ரூபாய் 600 உழவு மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.  வேளாண் துணை இயக்குனர் மதியரசன், உதவி இயக்குனர்கள் சாருமதி, அய்யம்பெருமாள், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு கலந்து கொண்டனர்.