தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி அர்ச்சனா நெகிழிக்கு மாற்றாக உயிரி நெகிழியினை கண்டுபிடித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தேர்வான அர்ச்சனா தற்போது தேசிய அளவில் நடைபெற உள்ள கண்காட்சியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் மாணவியை அழைத்துப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் மா.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.