tamilnadu

கும்பகோணத்தில் புத்தகங்கள் அறிமுக நிகழ்ச்சி

கும்பகோணம், ஏப்.25- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதிபுத்தகாலயம் இணைந்து நடத்தும் உலக புத்தக தின விழாவின் தொடர் நிகழ்ச்சி கும்பகோணம் பாரதிபுத்தகாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.‘பகத்சிங்’ என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து பேராசிரியர் சேதுராமன் சிறப்புரையாற்றினார். ‘பெண்மைய சிறுகதைகள்’ என்ற தலைப்பில் சுற்றுச்சூழலியல் செயல்பாட்டாளர் சு.நாராயணி உரையாற்றினார். வெங்கடேசன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் அனந்தசயனம் மற்றும் எழுத்தாளர்கள், வாசிப்பாளர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

;