tamilnadu

பேராவூரணி மாணவிகள் 99 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், ஏப்.20-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ப்ளஸ்டூ தேர்வில் 99.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் மொத்தம் 425 பேர் தேர்வெழுதினர். இதில் 424 பேர் தேர்ச்சி பெற்றனர். 600 மதிப்பெண்களுக்கு 524 பெற்று மாணவி க.சஹானா முதலிடமும், 511 மதிப்பெண்களுடன் மாணவி நீ.நிவேதா 2-ம் இடமும், 501 மதிப்பெண்களுடன் மாணவி ம.கவிதா 3-ம் இடமும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் மா.கோவிந்தராசு எம்எல்ஏ, பொருளாளர் எஸ்.எம்.நீலகண்டன், துணைத் தலைவர்கள் பால் புக்கர், ராஜேந்திரன், தலைமையாசிரியர் கஜானா தேவி, ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர். 

;