tamilnadu

img

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கும் விழா

 சேலம், ஜூலை 29- சேலத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் இரும்பாலை சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் புத்தகம் மற்றும் கல்வி ஊக்கத் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவ, மாணவியர் எதிர்வரும் அரையாண்டு தேர்வு, பொதுத் தேர்வுகளை அணுகுவது குறித்தும், தேர்வு எழுதும் நடைமுறைகள் குறித்தும் மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, சேலம் மாவட்ட கல்வி அதி காரி கணேசமூர்த்தி, செல்வகுமார், பொதுச்செயலாளர் ஜீவன், பவுண்டேஷன் இளநிலை அதிகாரி, சேலம் உருக்காலை செங்கா கவுண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;