பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணிநீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகன்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில், கடந்த 2013-ம் ஆண்டு உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்பப் படிப்புகள் நடத்தியது, கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூரக் கல்வியில் சேர்த்தது. படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது போன்று முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அப்பல்கலைக்கழக துணை பதிவாளர் ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இருவரையும் பணிநீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகன்நாதன் உத்தரவிட்டுள்ளார்.