tamilnadu

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

சேலம்:
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.திங்களன்று (ஆக. 9) 1,621 கன அடியாக இருந்த நீர்வரத்து செவ்வாயன்று (ஆக.10) மேலும் அதிகரித்து 3 ஆயிரத்து 46 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. 
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப் படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.76.07 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிந்து 74.99 அடியானது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

;