tamilnadu

img

சிபிஎம் தோழர் எ.அருணாச்சலம் காலமானார்

சேலம்,செப்15- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவ ரும், மேட்டூர் கொளத்தூர் கமிட்டி உறுப்பினருமான தோழர் எ.அருணாசலம் செவ்வாயன்று காலமானார் சேலம் மாவட்டம், மேட் டூர் கொளத்தூர் பகுதியில்  சிவப்பு துண்டு பெரியவர் என அன்புடன் அழைக்கப் படுவர் தோழர் எ. அருணாசலம். இவர் சுமார் 50  ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றி உழைக்கும் மக்களுக்கான பல கட்ட போராட்டத்தை முன்னின்று நடத்திவர். இந்நிலையில், இவர்  சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப் பட்டு வந்த நிலையில் செவ்வாயன்று காலமானார். தோழரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு சார்பில் செவ்வஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேல், மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் வசந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;