tamilnadu

img

தடகள போட்டியில் ஏற்காடு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

ஏற்காடு, நவ.14- சேலம் மாவட்ட அளவிலான தட கள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று மாண்ட் போர்ட் சமுதாய பள்ளி மாணவ,  மாணவிகள் சாதனை படைத்துள் ளனர். சேலம் வருவாய் மாவட்ட அள விலான தடகள போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பங்கேற்றனர். ஏற்காடு, கொம்பு தூக்கி மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி யில் இருந்து 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாணவர்கள் 13 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று 65 புள்ளிகளுடன் முதலி டத்தை பெற்றனர். இதேபோல், மாணவிகள் பிரிவில் மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாண விகள் 24 தங்கம், 8 வெள்ளி, 4 வெண் கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று  104 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற் றனர். இதன்மூலம், மாண்ட்போர்ட் சமுதாய பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். தடகள போட்டிகளில் பங் கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும்  அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் களையும் பள்ளி தாளாளர் ஜார்ஜ் பாராட்டி கௌரவித்தார்.