tamilnadu

img

ஆணவப் படுகொலை பாசத்தின் வெளிபாடாம்! - நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு

ஆணவப் படுகொலை வன்முறை அல்ல, அது பாசத்தின் வெளிபாடு என்று நடிகர் ரஞ்சித் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் நேற்று வெளியானது. இப்படம் பட்டியலின மக்களையும், சாதி மறுப்பு திருமணத்தையும் தவறாக சித்தரிக்கிறது என்று படத்தின் டிரெய்லர் வெளியான போதே பலர் கண்டங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள திரையரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணவப் படுகொலை வன்முறை அல்ல, அது பாசத்தின் வெளிபாடு என்று நடிகர் ரஞ்சித் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இவரது இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு, இவர் மீது நடவடிக்கை எழுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.