tamilnadu

img

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குகை ராமலிங்க சுவாமி தெரு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலிருந்த பயன்பாடு இல்லாத கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவரின் அடியில் சிக்கிக்கொண்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சிக்கி இருப்பதை கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவர் ராமலிங்கம் கோவில் தெரு வைத்திருந்த சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது.
 

;