tamilnadu

இன்ஜின் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

இன்ஜின் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

அம்பத்தூர், மே 14- பூந்தமல்லியில் வேனை பழுது நீக்கும் போது, இன்ஜின் பகுதி கவிழ்ந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். திருவண்ணாமலை யைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் வாகனங் கள் பழுது பார்க்கும் நிறு வனத்தில் ஊழியராகப் பணி புரிந்து வந்தார். இந்த நிலை யில் புதனன்று அஜித் நிறு வனத்தில் வேனில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது அவர் வேனின் இன்ஜின் பகுதியை தூக்கி நிறுத்தி விட்டு, அதில் கீழ்ப்பகுதியில் அஜித் பணி யாற்றினார். திடீரென வேனின் இன்ஜின் பகுதி கவிழ்ந்து விழுந்ததில், அஜித் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  காவல் துறையினர் அஜித் சட லத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகா ரின் அடிப்படையில்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.