tamilnadu

செப்.27 வேலை நிறுத்தத்தில் வாலிபர் சங்கம் பங்கேற்பு

சென்னை,செப்.25- விவசாயிகளுக்கு ஆதர வாக செப்டம்பர் 27 அன்று நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  பங்கேற்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நரேந்திரமோடி தலைமை யிலான ஒன்றிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்க ளை ரத்து செய்ய வேண்டும், மின்சார மசோதாவை வாபஸ்பெற வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் தில்லியில் கடந்த 10 மாத காலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  வேளாண் விரோத சட் டங்கள், மின்சார மசோதா வை வாபஸ்பெற வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங் களை ரத்து செய்யவேண் டும் என வலியுறுத்தி  செப்டம் பர் 27 அன்று நடை பெறக்கூடிய முழுவேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தன்னுடைய முழுமை யான ஆதரவினை தெரி வித்துக் கொள்கிறது.  அன் றைய தினம் நடைபெறக் கூடிய ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போ ராட்டங்களில் பங்கேற்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;