tamilnadu

img

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு வாலிபர் சங்கத்தினர் ஆறுதல்

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு வாலிபர் சங்கத்தினர் ஆறுதல்

திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி இந்து மதியின் பெற்றோரை சந்தித்து வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம், தாதாபுரம் கிராமத்தை சேர்ந்த  இந்துமதி. கடந்த 2022 ஆம் ஆண்டு தாதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 520 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இந்து மதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் ரூ. 90 ஆயிரம் பணம் கட்டி ஓர் ஆண்டு பயிற்சி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 350 மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து,  தனியார் பயிற்சி மையத்தில் பணம் கட்டி பயிற்சி பெறும் அளவிற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை இல்லை. மருத்துவர் ஆக வேண்டும் என்ற இந்துமதியின் கனவும் அவரை விடவில்லை. எனவே வீட்டில் இருந்தே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்தார் இந்துமதி. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடும் மன அழுத்தத்தால் கடந்த 02.03.2025ம் தேதி யன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 4 ஆம் தேதி தாதாபுரம் கிரா மத்திற்கு சென்று, மறைந்த மாணவி இந்துமதியின் பெற்றோரை நேரில் சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆறுதல் கூறினர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், முன்னாள் மாவட்டத் தலைவர் அ‌.கண்ணதாசன், திண்டிவனம் வட்டத் தலைவர் எஸ்‌.பார்த்திபன், வட்ட செயலாளர் ஏ.ம.சதீஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கா.ரவிசந்திரன், திண்டி வனம் வட்ட நிர்வாகிகள் திருமுருகன், சரவணன் உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.