பள்ளி அளவில் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைவர் விருது 2019 வழங்கப்படவுள்ளது. ஸ்கூல் ஆப் சக்சஸ் நிறுவனர் தீபா ஆத்ரேயா முன்முயற்சியில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பார்க் நிறுவன குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி விருதுகள் வழங்கப்படவுள்ளது.