tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : எழுத்தாளர் அகிலன் நினைவு நாள்....

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் 1922ஆம் ஆண்டுஜுன் மாதம் 27ஆம் நாள் பிறந்தார். 

சிறந்த தமிழ் எழுத்தாளரான இவர் எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர்பெற்றவராகஅறியப்படுகிறார். ஒரு சுதந்திரப் போராட்டவீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதினஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு.அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற நாவல் 1975 ஆம் ஆண்டிற்கானமதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது.இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன்என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம்ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. இவர்எழுதிய கண்ணான கண்ணன் என்ற குழந்தை நூலுக்கு தமிழக அரசின்கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கிசிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவைஇந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மனி, சீனா, மலாய் மற்றும் செக்கோசுலேவேகியா மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. சோவியத் ரஷ்யாவுக்கு சென்று வந்த அகிலன்எழுதிய ‘நான் கண்ட ரஷ்யா’ எனும் நூல்புகழ் பெற்றதாகும்.

இவர் 1988 ஆம் ஆண்டுஜனவரி மாதம் 31ஆம் நாள் காலமானார்.

;