tamilnadu

img

உலக கேரம் போட்டியில் சாதனை

சென்னை, டிச. 18 - கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடி  பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதோடு இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டி யில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதே போன்று வீராங்கனை கள் மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கும் தலா ரூ. 50 லட்சத்தை பரிசுத் தொகை யாக வழங்கினார்.