tamilnadu

img

சாலையை சீரமைக்ககோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம்

சாலையை சீரமைக்ககோரி  பெண்கள் நாற்று நடும்  போராட்டம்

கிருஷ்ணகிரி, மே 24 சூளகிரி ஒன்றியத்தில் பேரண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராயல் சிட்டி மற்றும் சிலிகான் சிட்டி குடியிருப்பு களில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இந்த பகுதியில் சாலைகள் சேரும் சகதியும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால், உள்ளூர் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்கக்   கோரி பல முறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள், “இப்பகுதி ஓசூர் மாநகராட்சியுடன் இணைய உள்ளதால், அதன் பிறகு தார் சாலை அமைப்பது குறித்து யோசிக்கப்படும்” என்று கூறி வந்தனர். அதேபோல், அலச நத்தம் பிரதான தார் சாலை யும் சேரும் சகதியாக நீர் தேங்கி குட்டைகள் போல் உள்ளதால், இந்த சாலை யையும் சீர்படுத்திட மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகளின் சாக்குப்போக்கு பாதி சாலை கெலவரப்   பள்ளி ஊராட்சி நிர்வா கத்தின் கீழும், மீதி சாலை பேரண்டப்பள்ளி ஊராட்சியின் கீழும் வருவதால், இரு தரப்பும் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் பொறுப்பை சுமத்தி சாக்குப்போக்கு கூறி தட்டிக் கழித்து வருகின்றனர். சாலை நடந்து செல்ல வும் வாகனங்கள் சென்று வரவும் இயலாத மோச மான நிலையில் உள்ள தால், அவசரத்திற்கு ஆம்பு லன்ஸ்கள் கூட வந்து செல்ல முடியாத அவல நிலை நிலவுகிறது. போராட்டம் தொடர்ந்து பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த 70 பெண்கள், மழையில் சேர் குழப்பி வயல் போல் இருந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் சாக்குப்போக்கு கள் கூறி, இரு சாலைகளை யும் சீர்படுத்தி தார் சாலை அமைத்துத் தராவிட்டால் தொடர் போராட்டம் நடத்ததப்  படும் என எச்சரித்தனர். பேச்சுவார்த்தை அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் முருகன், விஜயா ஆகியோர் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்ப தாகவும், சாலையில் பெரும் பள்ளமாக உள்ள இடத்தில் கற்களை கொண்டு சமன்    படுத்துவதாகவும் அதிகாரி கள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை யில் நாற்று நடும் போராட்  டத்தை பெண்கள் தற்காலி கமாக கைவிட்டனர்.