ஏகாட்டூரில் 24-வது மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் அடுத்த ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா என்பவரின் மகள் ஜெனிபர் (35). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரெனு ஜெனிபர் 24-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கேளம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலையில்லாத மன உளைச்சல் காரணமாக ஜெனிபர் தற்கொலை செய்து கொண்டதா தகவல்கள் வெளியாகி உள்ளது.