tamilnadu

img

தளர்வுகளின்றி ஒரு வாரம் முழு ஊரடங்கு... தமிழக அரசு அறிவிப்பு.....

சென்னை:
தமிழகத்தில் மே 25 முதல் மேலும்ஒரு வார காலத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கைஅமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொது முடக்கம் மே 24 அன்று முடிவடைகிறது. கடந்த14 நாள்களாக பொது முடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின் றனர். ஒவ்வொரு நாளும் பாதிப்புஎண்ணிக்கை மற்றும் பலி எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் மே 22 சனிக்கிழமையன்று 19 பேர் கொண்டமருத்துவ நிபுணா்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்தது.இதன்பிறகு, பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களான எழிலன், விஜயபாஸ்கர்,  நாகை மாலி,முனிரத்தினம், ஜி.கே.மணி, நயினார் நாகேந்திரன்,டி, ராமச்சந்திரன், சதன்திருமலைக்குமார், எஸ்.எஸ். பாலாஜி, ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், டி. வேல்முருகன், எம்.ஜெகன் மூர்த்தி ஆகிய 13 பேர்கொண்ட குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.அப்போது பேசிய உறுப்பினர்கள் அனைவரும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் தொற்று பரவலை கட்டுக் குள் கொண்டுவர தற்போது உள்ளபொது முடக்கத்தை மிகவும் கடுமையாக்க வேண்டும். மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பிறகு, ஏற்கெனவே நடைமுறை யிலுள்ள சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மே 24 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், இந்தஊரடங்கு உத்தரவை முழு கட்டுப்பாடுகளுடன் மேலும் ஒரு வாரகாலத்திற்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன் விபரம் வருமாறு:

பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.5.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றித் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.5.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
பால் விநியோகம், குடிநீர் மற்றும்தினசரி பத்திரிகை விநியோகம், பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். தனியார்நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டுநிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பநிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு சேவை  காலை 8 மணிமுதல் மாலை 6 வரை இயங்கலாம்.\

உணவகங்கள்
உணவகங்களில் காலை 6 மணிமுதல் 10 மணி வரையிலும், நண்பகல்12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம்  மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும். ஏ.டி.எம்.மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.வேளாண் விளைபொருள்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப் படும்.

இ-பாஸ் கூடுதல் கட்டுப்பாடுகள்
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும்  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவுதேவையில்லை.

பத்திரிகைகள்
செய்தி மற்றும் ஊடக நிறுவனங் கள் வழக்கம் போல் இயங்கலாம். தினசரி பத்திரிகை விநியோகம் செய்யலாம் எவ்வித தடையும் கிடையாது.தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைதொழிற்சாலைகள், அத்தியாவசியப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்  ஏற்கெனவே தெரிவிக்கப்பட் டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

காய்கறி-மளிகை கடைக்கு தடை
கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணிவரை திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஒரு வார காலத்திற்கு மளிகை மற்றும் காய்கறி கடைகள் .மீன் இறைச்சி கடைகளை திறப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப் பட்டுள்ளது.அதேபோல், தனியார் மற்றும்அரசு பேருந்துகள், கால் டாக்ஸி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்குவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று கடைகள் திறப்பு
பொது மக்கள் நலன் கருதி மே 23 ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும், மால்கள் திறக்க அனுமதி கிடையாது.

பேருந்துகள்
வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி மே 23 தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல் வதற்கு அனுமதிக்கப்படும்.கொரோனா நோய்த் தொற்றைக்கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது  மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது,  தனிமனித இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு/ கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள்உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும்.அரசு அறிவித்திருக்கும் ஒருவார கால முழு ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த காலகட்டத்தில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளதால் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குதொடர்ந்து அபராதம் விதிக்கப் படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த மே 23 ஞாயிறன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். எனவே,மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

;