tamilnadu

img

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் தனி வாக்காளர் பட்டியலை எப்போது வழங்குவீர்கள்? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை:
தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக பதில்மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்கஅனுமதியளித்து இந்திய தேர்தல்ஆணையம் உத்தரவு பிறப்பித்துள் ளது. இந்த உத்தரவை எதிர்த்து திமுகமற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளன.இந்த நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ளமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதிவாரியான பட்டியலை வழங்கக் கோரிதிமுக எம் எல்ஏவும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, நேரு தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமைஉள்ளது. அந்த வகையில் தபால்வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப் பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தனி பட்டியலை வழங்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட வாக்காளர் களுக்கு முன் கூட்டியே இந்த வசதிகுறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் அறிவித்த பிறகு தான், தபால் வாக்குகள் பதிவு செய்ய விண்ணப்பங்கள்வழங்கப்படும்.அந்த விண்ணப்பங் களை பரிசீலித்து தேர்தல் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். அதன் பிறகுதான் அப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் வாக்குகள் பதிவு செய்யஎப்போது விண்ணப்பம் பெறப்படும்,எப்போது அதன் மீது முடிவெடுக் கப்படும், எப்போது அந்த பட்டியல்அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என விரிவாக எழுத்துப்பூர்வமான பதில் மனுவை பிப்ரவரி 19 ஆம்தேதி தேர்தல் ஆணையம் தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;