tamilnadu

img

திமுக அரசின் திட்டங்களை வீடுதோறும் விளக்கி இமாலய வெற்றி பெறுவோம்

சென்னை, மார்ச் 23 - தமிழக அரசின் திட்டங்களை இல்ல ந்தோறும் கொண்டு சென்று மக்க ளவைத் தேர்தலில் இமாலய வெற்றி பெறுவோம் என்று தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தா.சுமதி (எ)தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.

 இந்தியா கூட்டணியின் சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி யில் திமுக வேட்பாளராக த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடு கிறார். இதனையொட்டி சனிக்கிழமை யன்று (மார்ச் 22) நந்தனத்தில் வேட் பாளர் அறிமுகக் கூட்டம் நடை பெற்றது.

 இந்தக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் “இந்தியா கூட்டணி உருவாக காரண மாக இருந்த நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. எனவே வெற்றி நிச்சயம். மக்களவை உறுப்பின ராக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்ததை தொடர வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை வீடு தோறும் கொண்டு செல்வோம்”‌ என்றார்.

பிரதமர் ஏன் வருகிறார்?
சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது வராத பிரதமர் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டதை தராத பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி வரு கிறார். மாநில அரசு கொடுத்த 6ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை பிச்சை என்று கொச்சைபடுத்துகின்றனர். நமது சுய மரியாதையை பாதுக்காக்க வாக்களிப் போம். தாமரையை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் பேசுகையில், “சென்னை  மாநகர எல்லைக்குள் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதற்கு காரணமாக இருந்தவர் தமிழச்சி தங்க பாண்டியன் என்பதை சுட்டிக்காட் டினார்.

ஒரிசாவில் பாஜக கூட்டணி முயற்சி முறிந்து விட்டது. பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியி லிருந்து விலகி ஓடுகிறார்கள். 3 மாநி லங்களில் பாஜக போட்டியிடாது என்று அறிவித்துள்ளார்கள். பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு 37ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதை ஒன்றிய அரசு தர வில்லை. 20 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவையை தர மறுக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியை வழங்க வில்லை. பிரதமர் வெளிப்படையாக தமிழகத்திற்கு நிதி தர முடியாது என்கிறார். 1 ரூபாய் தமிழகத்தில் இருந்து வரியாக சென்றால் 29 பைசாவைத்தான் திரும்பி தருகி றார்கள். ஆனால் உ.பி.க்கு 2 ரூபாய் தரு கிறார்கள்.

10 கோடி பேர் பேசும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கிய மோடி அரசு, 16 ஆயிரம் பேர்  பேசுகிற சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. எனவே தமிழ கத்தை வஞ்சிக்கும் மோடிக்கு பாடம் புகட்டுவோம். 40 தொகுதிகளிலும் இந்தியா அணியை எதிர்த்தவர்கள் டெபாசிட் இழப்பார்கள்.  தமிழகத்தி லேயே தென்சென்னை வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற சாதனையை படைப் போம் என்றும் அவர் கூறினார். 

இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மயிலை தா. வேலு, அரவிந்த்ரமேஷ், பிரபாகர் ராஜா, கருணாநிதி, தாயகம்கவி, ஹசன் மௌலானா, துணை மேயர் மகேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பேசினர்.