tamilnadu

img

அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம்... ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்....

சென்னை:
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம் என்றும் ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம் என்றும் தமிழகமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநிலசெயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆற்ற வேண்டிய அரசியல் கடமைகள் குறித்து விவாதித்து தமிழக வாக்காளர்களுக்கு கீழ்க்கண்ட வேண்டுகோளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.மத்தியில் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வேளாண் திருத்தச் சட்டங்கள் உட்பட மக்கள் விரோதப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரலாறு காணாத, வீரம்செறிந்த போராட்டத்தினை விவசாயி கள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் களப்பலியாகியுள்ளனர். இந்திய நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டிவருகின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்க கொடூரமான அடக்குமுறை களையும், அவதூறுகளையும் மத்திய பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு
மத்திய பட்ஜெட்டும் மக்கள் மீதானமேலும் ஒரு தாக்குதலாகவே அமைந்துள்ளது. அனைத்து பொதுத்துறைகளை யும் தனியாருக்கு தாரை வார்க்கும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பெட்ரோல்- டீசல் - சமையல் எரிவாயு விலைகளை அவ்வப்போது உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்திய நாட்டின்வளம் அனைத்தையும் வாரிக் கொடுக்கும் வரைபடமாகவே மத்திய பட்ஜெட்டும் அமைந்துள்ளது.வேலையிழப்பு அதிகரித்துள்ள நிலையில், இருக்கும் வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான சிறு-குறு, நடுத்தர தொழில்கள் அழிந்து கொண்டுள்ளன. கொரோனா, பொதுமுடக்க பாதிப்பில் வாழ்விழந்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க மத்திய அரசு மறுத்துவருகிறது. விலைவாசி உயர்வை தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மாநிலங்களின் உரிமைகளை தட்டிப் பறித்து வருகிறது. இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பாக்கி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக்உதவித் தொகை உள்ளிட்ட நிதிகளைவழங்க மறுத்து வருகிறது. தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை கிடப்பில்போட்டுள்ளது. மதுரையில் அறிவிக்கப் பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கனவாகவே உள்ளது. வெள்ளம், புயல் நிவாரண நிதி மறுப்பது உள்ளிட்டு பல வகைகளில் நரேந்திர மோடி அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவருகிறது.பாஜக தனது மதவெறி அரசியலை தீவிரப்படுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கியுள்ளது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளை தகர்த்து வருகிறது.

அதிமுக அரசில் கொடிகட்டி பறக்கும் லஞ்சம் - ஊழல்
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க திராணியற்ற அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. பாஜக அரசின் ஊதுகுழலாகவே நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், வெளியிலும் அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதைப் பற்றி கவலைப்படாமல் கடைசி நிமிடம் வரை பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளது.பணி நியமனம், கட்டுமான ஒப்பந்தங்கள் என அனைத்திலும் வகை தொகை யில்லாமல் லஞ்சமும் - ஊழலும் கொடிகட்டி பறக்கிறது. பெண்கள் - குழந்தைகள் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வக்கில்லாத அதிமுக அரசு, ஜனநாயக உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்

தொடர்ச்சி 4ம் பக்கம்.... 
 

;