tamilnadu

img

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருப்பெரும்புதூர்,ஏப்.29-காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும்புற்றுநோய் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலை ஓரம் ஆறாக ஓடுகிறது. மேலும் சில இடங்களில் கழிவுநீர்அப்படியே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. கடும் வெய்யில் அடிப்பதால் சாலையில் நடந்து செல்லும் ஆடு, மாடுகள் கழிவுநீரை குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.பேரூராட்சி அதிகாரிகள், தனியார் குடியிருப்பிற்கும், புற்றுநோய் பயிற்சி மையத்திற்கும் பலமுறை அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து கழிவு நீர் வெளியேற்றியே வருகின்றனர்.கழிவுநீர் வெளியேற்றுவதால், சுற்றுச்சூழலும் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான வாய்பும் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;