tamilnadu

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை, அக்.3- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்  தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்  பட்டியல் வெள்ளியன்று(அக்.4) வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இத னால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு  அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்  காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து  உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை  மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநில தேர்தல் அலு வலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்  யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் பதிவு  அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி தேர்த லுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4 ஆம்  தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் இந்த பட்டியல் 5 ஆம் தேதி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.

;