tamilnadu

img

“சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”

சென்னை, ஜன.13- பொங்கல்பண்டிகையை சென்னை மாநகர மக்கள்  களிப் போடு கொண்டாடும் வகையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திரு விழா”வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தீவுத்திடலில் சனிக்கிழமை மாலை  இந்தவிழாவை  தொடங்கிவைத்த அவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். விழா வில் தமிழகத்தின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

சென்னையில் கலைநிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ள இடங்கள் 

சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் – மாநகராட்சி விளை யாட்டு மைதானம், பெரம்பூர் - முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் – ராபின்சன் விளை யாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா,  செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி விளையாட்டு திடல், திரு வல்லிக்கேணி – பாரத சாரண சாரணி யர் திடல், தி.நகர் - நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதா னம், கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – பழனியப்பா நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா ஜன. 14 ஆம்தேதி முதல்  17 ஆம் தேதி வரை  மாலை 6 மணி முதல்  இரவு 9 மணிவரை நடைபெறும். சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறை யாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவை யாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  இந்த விழாவில் மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், ராஜகண்ணப்பன், பி.கே. சேகர்பாபு, டி.ஆர்.பி. ராஜா, பெ மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, டாக்டர் கலாநிதி வீராசாமி,   தமிழச்சி தங்க பாண்டியன், சட்டமன்ற உறுப்பி னர்கள்  த. வேலு, இ. பரந்தா மன், தமிழரசி, துணை மேயர்  மு. மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.