tamilnadu

img

விசிக பொருளாளர் மறைவு.... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்....

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசப் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விசிக மாநிலப் பொருளாளர் முகம்மது யூசுப்பிற்கு கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் வெள்ளிக்கிழமை அன்று மே 14 உயிரிழந்தார். அவருடைய உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத் திற்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.முகம்மது யூசுப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந் தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன், முகம்மது யூசுப் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அனைவ ருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி யுள்ளார்.

திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “விசிக மாநில பொருளாளர் முகம்மது யூசுப் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந் தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம்.” என பதிவிட்டுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;