கோவை மாவட்டத்தில் கொடிய காலரா தொற்று பரவிய காலத்தில், இந்த நோய்க்கு பயந்து கோவை கிணத்துக்கிடவு வடசித்தூர் பகுதியில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி, கோவை சிங்காநல்லூர் உப்பிலிய
பாளையத்தில் குடியேறியது அக்குடும்பம்.
கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக இருந்த உப்பிலியபாளையம் பகுதியில், உப்பிலிய பாளையம் முத்துவிற்கு இடதுசாரிகளுடனான தொடர்பு ஏற்பட்டது. பின்னர் சிங்காநல்லூ ரில் உள்ள கோத்தாரி மில்லில் தொழிலாளி யாக பணியாற்றினார். அங்கு ஏஐடியுசி தொழிற்சங்கத்தில் இணைந்து, தொழிலாளர்க ளின் உரிமைக்கான போராட்டக் களத்தில் முன் நின்றார். இது பஞ்சாலை நிர்வாகத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தின் வளர்ச்சியை கண்டு காங்கிரஸ் தொழிற்சங்கமும் எரிச்ச லடைந்தது.
முடிந்தவரையில் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுவது, எதிர்த்து கேட்பவரை கொலை செய்வது என்கிற நோக்கத்தோடு அலைந்த முதலாளி வர்க்கம், காங்கிரஸ் குண்டர்களின் துணையோடு முத்துவையும் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துக்கிடந்தது.
எந்நேரமும் துறுதுறுவென சுற்றிச்சுழன்று தொழிற்சங்க பணிகளிலும், ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சியிலும் உணர்வுர் பூர்வமான பணியினை கண்டும், தொழிலா ளர்கள் செங்கொடியின் பக்கம் திரள்வதை சகிக்க முடியாமல், தீர்த்துக்கட்ட முடிவெடுத்தது பஞ்சாலை நிர்வாகம். 1953 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி கோத்தாரி மில்லுக்குள்ளேயே குண்டர்களை வைத்து நூலை அறுக்க பயன்படுத் தும் கொக்கி வடிவிலான கத்தியை கொண்டு குத்தி முத்துவை படுகொலை செய்தனர்.
ஓர் உப்பிலியபாளையம் தியாகி முத்துவை கொலை செய்யலாம், ஓராயிரம் “முத்து” உருவா வதை எவராலும் தடுக்க முடியாது என்பதை காலம் உணர்த்தியது. 71 ஆண்டுகளை கடந்தும், இன்றும் உப்பிலியபாளையம் தியாகி முத்து நினைவு கூரப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து உப்பிலியபாளையத்தில் நினைவு தின ஊர்வல மும், உறுதிமொழியேற்பும் தொடர்ந்து நடைபெறுகிறது.
தியாகிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றனர், காலத்தை வென்று வாழ்கிறார்கள்.
இன்று தியாகி முத்து நினைவு நாள்