சென்னை, ஜூலை 6- சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் அடிக்கடி தாக்குதல் சம்ப வங்களில் ஈடுபடுவதாகவும், எனவே, அவர்கள் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகளை கடு மையாக்குவது என்றும் தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய் துள்ளது.
இது தொடர்பாக பல்க லைக்கழகத்தின் முதல்வர் வே. பாலாஜி வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவர்களை- வருங்கால வழக்குரைஞர்க ளாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவர்களாகவும் உரு வாக்கி வருகிறது. தேசிய அள வில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன் னதாரணமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த பல்க லைக்கழகத்தின் நற்பெய ருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில மாணவர்கள் படிப்பின் மீது கவனம் செலுத் தாமல் சக மாணவர்கள் மீது உடல் ரீதியான தாக்குதலில் ஈடு படுவதும், தங்களுக்குள்ளே தாக்கிக் கொள்வதும், வெளி யில் இருந்து வருபவர்களை தாக்குவதும் நடந்து வருகிறது.
இது சட்டத்தை உங்கள் கை யில் எடுத்துக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல் பாடுகள் ஏற்கத்தக்கதல்ல. இதுவரை இதுபோன்ற செயற் பாடுகளில் ஈடுபடும் மாணவர் கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், இனிமேல் இத்த கைய செயற்பாடுகளில் ஈடு படும் மாணவர்கள் தேர்வு எழு துவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சட்டப் பள்ளியில் இருந்தும் நிரந்தர மாக நீக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.