சென்னை, ஆக. 13 - தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் முன்பும், இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI), செவ் வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தி னர்.
சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகங் களுக்கான துணைவேந்தர்களை நிய மனம் செய்யவிடாமல், ஆளுநர் ரவி அழிச்சாட்டியம் செய்து வருகிறார்.
யுஜிசி நிதியை கடுமையாக குறைத்து, பேராசிரியர்களுக்கு ஊதி யம் கூட தர முடியாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.
இப்பல்கலைக்கழக நிர்வாகங் களின் அலட்சியத்தால், அண்ணா மலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கங்களுக்கு உட்பட்ட கல்லூரி மாண வர்களுக்கான தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
இவை தவிர, மாநில உயர்கல்வித் துறையின் நிதி தணிக்கை, நிரப்பப் படாத பேராசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளால், உயர் கல்வி மையங்களான பல்கலைக் கழகங்கள் சிக்கலில் உள்ளன.
எனவே, அண்ணா பல்கலைக்கழ கத்தில் நடந்த முறைகேடுகளை கண்டி த்தும், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கல்வி யியல் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களு க்கான துணைவேந்தர்களை உட னடியாக நியமித்திட ஆளுநர் அனு மதி வழங்க வேண்டும்; மாநில பல் கலைக்கழகங்களுக்கான நிதியை ஒன் றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் நடைபெற்றது.
இதில், சென்னை பல்கலைக்கழ கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் தௌ. சம்சீர் அக மது & மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண்குமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் நித்திஷ், மாநி லக் குழு உறுப்பினர் தமிழ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ, சௌ மியா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் நியமனங்களில் நடை பெற்ற முறைகேட்டை கண்டிக்கும் போராட்டத்திற்கு மாணவர்கள் ஒன்றி ணைவதற்கு முன்பாகவே ஆங்காங் கே மாணவர்களைத் தடுத்து, அராஜ கமான முறையில் தமிழக காவல் துறை மாணவர்களை கைது செய்தது இதில் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ரா. பாரதி, மாவட்டத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட் டோர் கைதாகினர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கம் முன்பு மாவட்டச் செயலாளர் சந் துரு தலைமையில் நடைபெற்ற போரா ட்டத்தில் மாவட்டத் தலைவர் அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். ஜனார்த் தனன், திருச்சி மாநகர் மாவட்டத் தலை வர் சூர்யா, மாநிலக் குழு உறுப்பினர் மாரியம்மாள், திருச்சி புறநகர் மாவ ட்டச் செயலாளர் ஆமோஸ், பெரம் பலூர் மாவட்டச் செயலாளர் ராமகிரு ஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் சி. மிரு துளா, மாவட்டச் செயலாளர் பவித்ரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு மாநில செயற் குழு உறுப்பினர் ஷாலினி, மாநிலத் துணைத் தலைவர் தே. சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன், மாநிலக் குழு உறுப்பினர் கல்கிராஜ், ஈரோடு மாவட்டத் தலைவர் நவீன், செயலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில இணைச் செயலாளர் ஜி.கே. மோகன், மாவட்டத் தலைவர் சஞ்சய் மற்றும் செயலாளர் சைலஸ் அருள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.