tamilnadu

img

தமிழகத்தில் 4  மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி - அமைச்சர் மா. சுப்பிரமணியன் 

நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரளா மற்றும் அதன் எல்லையிலிருந்து விமானங்கள், ரயில்கள் மூலம் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். 

மேலும் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதால் 600 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். 

;