tamilnadu

img

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை, ஏப்.3 - காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டபோதிலும் கலைஞர், ஜெய லலிதா ஆட்சியில் அமல்படுத்தப்பட வில்லை, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தானே அறிமுகப்படுத்தப் பட்டது  என்று  திமுக இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்தியா கூட்டணி சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

அவருக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (ஏப்.3) தி.நகர், வேளச்சேரி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வரு மாறு:

பாஜகவில் ஒரு சவுகரியம் என்ன வென்றால், தேர்தலில் போட்டிட்டு தோற்றால் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக்கி விடுவார்கள். கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு தோற்றவரை, இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தார்கள். ஆடு தானா வந்து தலைய நீட்டுற மாதிரி, ஆளுநர் பதவி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் இங்கு போட்டி யிடுகிறார். பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக்  என்பதுபோல, சட்ட மன்றத்திற்கு வீராப்பா வரும் ஆளுநர் வந்த வேகத்தில் ஓடி விடுகிறார். ஆளுநர் பதவி நியமன பதவி. சாதாரண போஸ்ட்மேன் வேலைதான். முதல மைச்சர் சொல்வதை கேட்டு ஒன்றிய அரசுக்கு சொல்ல வேண்டும். அங்கு சொல்வதை, கொடுப்பதை கொண்டு வந்து இங்கு தர வேண்டும்.

முதல மைச்சர் எழுதி கொடுப்பதை படிப்பது தான் ஆளுநர் வேலை. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் பெயரை கூறாமல் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி வாசித்தார். முதலமைச்சர் எழுந்து பேச முற்பட்டதும், ஆளுநர் மின்னல் போல் ஓடிவிட்டார். தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்றார் ஆர்எஸ்எஸ் ரவி. எல்லோரும் எதிர்த்தபோது, அதிமுக மட்டும் அமைதியாக இருந்தது. இந்தாண்டு சட்டமன்ற கூட்டத்திற்கு வந்த ஆளுநர், தேசிய கீதம் மட்டும் தான் பாட வேண்டும் என்றார்.

தமிழ்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் என்று முதலமைச்சர் சொன்னதும் ஓடி விட்டார். அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து ஓடுவதை பார்த்துதான் ஆளுநர் ஓடி விட்டார் என்பதையே தெரிந்து கொள்ள முடிகிறது. அந்தளவிற்கு வேகமாக ஓடி விடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வந்தாலும், கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் அனுமதிக்க வில்லை. எடப்பாடிதான் நீட் தேர்வை அனுமதித்தார். தமிழகத்திற்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றியபோது பாஜக ஆதரிக்க வில்லை.

நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும். தணிக்கைக்குழு அறிக்கைபடி, 7.50 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு சுருட்டிவிட்டது. ஒரு கி.மீ. சாலை அமைக்க 250 கோடி செலவு செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரே செல்போன் எண்ணை கொண்டு கொடுக்கப்பட்ட  காப்பீட்டு அட்டையிலிருந்து இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள் ளனர். இவைகளை பற்றி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். சிஏஏவை ஆதரித்ததோடு, கல்வி, நிதி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அதிமுக விட்டுக் கொடுத்து விட்டது. இந்த தேர்தலில் பாஜக, அதிமுக விற்கு பாடம் புகட்டுவோம். இழந்த உரிமைகளை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.