tamilnadu

img

முதல்வரின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத் நியமனம்.....

சென்னை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக இந்திய ஆட்சிப் பணியாளர்கள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது: அதன்படி, த. உதயச் சந்திரன், பி.உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், “மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஐ.ஏ.எஸ்அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் புதிய துறை அமைக்கப் படுகிறது. இவர் இதற்கு முன்பு திருநெல் வேலி மாவட்ட  ஆட்சியராக இருந்தார்.

;