tamilnadu

img

சட்டப்பேரவையில் இரு தனித் தீர்மானங்களை நிறைவேற்றம்!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ஆகிய ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தனித் தீர்மானங்களை தாக்கல் செய்தார். சிபிஎம் எம்.எல்.ஏ சின்னத்துரை, சிபிஐ எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன், விசிக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் உள்ளிட்டோர் இத்தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்தனர். இதை அடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இரு தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.