tamilnadu

img

துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய 2 பேருக்கு கொரோனா உறுதி!

துபாயிலிருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று சீனாவில் இருந்து தமிழகம் வந்த மதுரையை சேர்ந்த 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், துபாயிலிருந்து தமிழகம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த 2 பேருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

;