தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டை சேகரிப்பு
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை ஓரப்பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கடற்கரை பகுதியில் ஆலிவ் ரெட்லி வகையைச் சேர்ந்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டு விட்டு செல்லும். இதை பறவையினங்கள், நரி உள்ளிட்ட விலங்கினங்கள் அந்த முட்டைகளை சாப்பிட்டு சேதப்படுத்திவிடும். இதனால் ஆமை இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து, அதனை ஓர் இடத்தில் வைத்து பொரிக்க வைத்து மீண்டும் ஆமை குஞ்சுகள் கடலில் விடும் பணி வனத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேவனாம்பட்டினம் முதல் அக்கரை கோரி வரை நள்ளிரவில் கடற்கரை ஓரம் ஆமை முட்டை சேகரிக்கும் பணி பணி நடைபெற்றது. ஆமை முட்டை சேகரிக்கும் பணியில் வன அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், ஆணையர் அனு , கூடுதல் ஆட்சி யர் சரண்யா, கோட்டாட்சியர் அபிநயா, உதவி இயக்குனர் ஊராட்சி ஷபானா அஞ்சும், மாவட்ட வன அலுவலர் குரு சாமி, வனச்சரக அலுவலர் பாரதிதாசன், வானவர் திலகராஜ், மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட முட்டை களை சேகரித்தனர்.