“என்னிடம் பேசுவதற்கு வங்காள மொழி, சுர்ஜித்திடம் இந்தி, பசவபுன்னையாவிடம் தெலுங்கு, பி.ராமமூர்த்தியிடம் தமிழ் பேசினார். பியாங் யங் சென்ற போது உங்களிடம் என்ன மொழி பேசினார் தோழர்?” பல வருடங்களுக்கு முந்தைய பயணத்தின் போது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாடு, பேசிய மொழிகள் பற்றி கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மற்றொரு மகத்தான தலைவர் ஜோதிபாசு, தன்னிடம் கேட்ட வேடிக்கையான கேள்வியை, சீத்தாராம் யெச்சூரி நினைவு கூர்ந்து சிரித்தார்.
யெச்சூரியின் சிரிப்பு அவரைச் சுற்றி நின்றவர்களுக்கும் பரவியது. திருவனந்தபுரத்தில் உள்ள இஎம்எஸ் அகாடமியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடந்தது. அப்போது, இஎம்எஸ் அகாடமி யின் சுவரில் தோழர் இஎம்எஸ்சுடன் இருக்கும் படத்தைப் பார்த்த யெச்சூ ரிக்கு பழைய நிகழ்வு நினைவுக்கு வந்தது.
1987 ஆம் ஆண்டில், வட கொரிய குடியரசுத் தலைவர் கிம் இல் சுங்கின் 75 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அன்றைய சிபிஎம் பொதுச் செயலா ளர் இஎம்எஸ் உடன் யெச்சூரி பியாங்யாங்கிற்கு சென்றார். அன்று எடுத்த படம் திருவனந்தபுரம் இ.எம்.எஸ் அகாடமியின் சுவரில் இன்றும் மங்காமல் உள்ளது.