சென்னை, ஜன. 19 - தமிழ்நாடு முழுவதும் போக்கு வரத்து ஊழியர்கள் செவ்வாயன்று (டிச.19) வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கினர்.
போக்குவரத்து கழகங்களின் வர வுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. அதனை அரசு கண்டு கொள்ளாத நிலையில் போக்குவரத் துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கழக மேலாண் இயக்குநர்களிடம் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கினர்.
சென்னையில் கூட்டமைப்பில் உள்ள 16 சங்கங்களின் தலைவர்கள் ஊர்வலமாக சென்று விரைவு போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர், மாநகர போக்குவரத்து கழக இயக்கு நர் ஆகியோரிடம் அறிவிப்பை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களி டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் ஏ.ஆறுமுக நயினார் கூறியதாவது:
போக்குவரத்து கழகங்களில் 2018ம் ஆண்டு 23 ஆயிரம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. தற்போது 19 ஆயிரத்து 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதிலும், ஊழியர் பற்றாக்குறை காரணமாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எனவே, பேருந்துகளை முழுமையாக இயக்கி, மக்களின் பயண உரி மையை பாதுகாக்க வேண்டும்.