சென்னை கடற்கரைச் சாலையில் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. கலைஞர் நினைவு அருங்காட்சி யகத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரின் நினைவிடத்தில், ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்று பொறிக்கப் பட்டுள்ளது. கலைஞர் நினைவிடத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி, கலைஞருக்கு 8.11.2005 அன்று எழுதிய கடிதம் ஆங்கி லத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் பின்புறம் கலை ஞர் முகம் பொன்னிறத்தில் அமைக்கப் பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் மின் விளக்குகள் ஒளிர்கிறது.
நினைவிடத் தின் கீழே நிலவறைப் பகுதியில், ‘கலை ஞர் உலகம்’ எனும் பெயரில் அருங்காட்சி யகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக முன்பதிவு செய்ய ஏற்ற வகையில் இணையதளம் உரு வாக்கப்படும் எனவும், முன்பதிவு செய்த வர்கள் பார்வையிட உரிய நேரம் ஒதுக் கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் இடப்புறம் சென்றால், நடைபாதையின் வலப்புறத்தில், திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்று வாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளி யுடன் மிளிர்கின்றன. அருங்காட்சி யகத்தின் உள்ளே வலது பக்கம் திரும்பி னால், இடப்பக்க சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ்ப்புறம், ‘தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும்’ என கலைஞர் ஆட்சியில் 23.11.1970 அன்று பிறப்பித்த அரசாணை யும், ‘தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று பிறப்பித்த அரசாணை யும் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
கலைஞர் எழிலோவியம் அறை
அதன் அருகில், ‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் இளமைக் காலம் முதல் அவர் வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வுகள், அவரின் படைப்பு கள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறை வேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர் பான புகைப்படங்கள் அமைந்துள்ளன.
அடுத்து ‘உரிமைப் போராளி கலை ஞர்’ என்னும் தலைப்பைக் கொண்ட அறையில், தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் உரையாற்றும் காட்சி அமைந்துள்ளது.
புகைப்படங்கள்
பின்புறம், தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்துள்ளது. அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலை ஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் உள்ள நிலையில், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அங்கு சில நிமிடங்களில் புகைப்படம் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் வலப்புறத்தில் கலைஞரின் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கலைஞர் கருணாநிதி யின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்கள் காணப்படும். அவை ஒவ்வொன்றின் மீதும் நாம் கை வைத்தால், அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும்.
தொடர்ந்து, ‘அரசியல் கலை அறிஞர் கலைஞர்’ எனும் அறையின் உள்ளே திரை அமைக்கப்பட்டு அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் அவரது பிறப்பு முதல், இறுதி நாள் வரையிலான முக்கிய வர லாற்று நிகழ்வுகள், ‘கலையும் அரசி யலும்’ எனும் தலைப்பில் படக் காட்சி களாக தோன்றும்.
திருவாரூரிலிருந்து சென்னைக்கு ரயில் பயணம்
தனைப் பயணம்’ எனும் அறையில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதில் அமர்ந்த வாறு தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஊர்களில் கலைஞரின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும் வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்தும். அறைகளுக்கு வெளியே அமைந்து ள்ள நடைபாதையின் இருபுறங்களிலும், பெண்ணியக் காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கருணா நிதி முதலான தலைப்புகளில் புகைப் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் 5 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. அவற்றில் கலை ஞரின் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அதன் எதிரே கலைஞர், முத லமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தோன்றும் புகைப்படம் பெரிய அளவில் அமைந்து, ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தலைப்பாகக் கொண்டுள்ளது.
இப்பகுதியின் இறுதியில் காந்த விசை யைப் பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கருணாநிதி அந்தரத்தில் மிதப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் கண்டு வெளியே வரும் வழியில் வலப்புறச் சுவர்களில் தமி ழர்களின் கலாச்சார மையம் வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டிடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய - கலை ஞர் படைத்த நவீனங்களின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியே வரும் போது இருபுறங்களிலும் கலைஞரின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமி ழிலும், ஆங்கிலத்தில் பொறிக்கப் பட்டுள்ளன.