tamilnadu

img

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

சுற்றுலா வேன் பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

கள்ளக்குறிச்சி, மே 24 உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியன்மாதேவி ஜிஎஸ்டி சாலை யில் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலை யோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். திருநருங்குன்றம் கிராமத்தில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு மருதமலை பகுதிக்கு கோடைக்கால சுற்றுலா சென்று வந்த வேனை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் ஓட்டிச் சென்றார். சுற்றுலா முடிந்து இன்று காலை சொந்த ஊரான திருநருங்குன்றம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த நிலை யில், உளுந்தூர்பேட்டையை அடுத்த செம்பியன்மாதேவி ஜிஎஸ்டி சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை-சேலம் ஜிஎஸ்டி சாலையில் நடந்த இந்த விபத்தின் காரண மாக செம்பியன்மாதேவி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.