சென்னை, ஜூலை 22- தமிழகத்தில் கள் விற்ப னைக்கு விதித்த தடையை நீக்க அரசு ஏன் மறுபரிசீ லனை செய்யக் கூடாது என் பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அர சுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை யைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் முரளிதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதி பதி கே.குமரேஷ் பாபு அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது மதுபானங் களை சூப்பர் மார்க்கெட்கள், ரேசன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதே சமயம், டாஸ் மாக் கடைகளில் மதுபான விற்பனையில் முறைகேடு கள் நடந்துள்ளதாக கூறப் படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலும், கள் விற்ப னைக்கு விதித்த தடையை நீக்குவது அரசின் கொள்கை முடிவு எனவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக் களுக்காக, கள் விற்ப னைக்கு விதிக்கப்பட்ட தடை யை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்கும்படி தமி ழக அரசுக்கு உத்தரவிட்ட னர்.இந்த வழக்கின் விசா ரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.