tamilnadu

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட முயன்ற கணவர் மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை, ஜூன் 7- மனைவியின் 25ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல்  விளக்கு அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து கணவர் பலியானார்.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவ னம் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவர் தனியாக பார்சல் சர்வீஸ் நடத்தி  வந்தார். அகஸ்டின் பால் கடந்த 8 மாதங் களுக்கு முன்பு கீர்த்தி (25) என்பவரை திருமணம் செய்தார். மனைவி கீர்த்திக்கு வெள்ளிக்கிழமை 25ஆவது பிறந்தநாள்.

இதை சிறப்பாக  கொண்டாட அகஸ்டின் பால் முடிவு  செய்தார். திருமணம் நடந்து மனைவியின்  முதல் பிறந்த நாள் என்பதால் உறவினர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு வீடு முழுவதும் சீரியல் விளக்கு  மற்றும் அலங்கார வேலைகள் வியாழனன்று  மாலை நடைபெற்றது. அப்போது சீரியல் லைட் அமைக்கும் போது எதிர்பாராத விதமாக அகஸ்டின் பால் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே  மயக்கமடைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது மனைவி கீர்த்தி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச் சியில் உறைந்தனர். பிறகு அகஸ்டின் பாலை  மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

அதை  கேட்டு அவரது மனைவி கீர்த்தி மருத்துவ மனை வளாகத்திலேயே கதறி அழுதார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  அசோக் நகர் காவல் நிலையத்தினர் அகஸ்டின் பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணம் நடந்து 8 மாதத்தில் மனைவி கண்முன்னே கணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.